இடுகைகள்

ஆகஸ்ட், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா

  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 62: 1-5 இரண்டாம் வாசகம் : திருத்தூதர் பணிகள் 13: 16-17, 22-25 நற்செய்தி வாசகம் : மத்தேயு 1: 1-25 திருப்பலி முன்னுரை      உலகின் மீட்பராம் நம் இறைமகன் இயேசுவின் பிறப்பு பெருவிழா திருவிழிப்பு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.           எதிர்நோக்கு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி ஆகிய அனைத்தின் சங்கமுமான இறைமகன் நமக்காக இன்று பிறந்துள்ளார். காரிருளில் நடந்த மக்கள் பேரொளியை காணும் வண்ணம் அவரது பிறப்பு அமைந்துள்ளது. உலகின் மீட்பராம் நம் இறைமகன் பிறந்த நாளில் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க இறைவனை உள்ளங்களில் ஏற்போம்.           காலம் நிறைவேறிய போது கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இறைமகன் என்ற நிலையில் இருந்து இறங்கி, நமக்காக மனிதராக பிறந்தார். அவரே நமக்காக விண்ணில் இருந்து வந்த விடியல். நமக்காக பிறந்திருக்கும் அவர் நம் வாழ்வில் நிச்சயமாக பேரொளியை வீசச் செய்வார் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்போ...

ஆண்டின் பொதுக்காலம் 23ஆம் ஞாயிறு

படம்
  நிறம்: பச்சை வாசகங்கள் முதல் வாசகம்: சாலமோனின் ஞானம் 9: 13-18 இரண்டாம் வாசகம்: பிலமோன் 2: 9-10, 12-17 நற்செய்தி வாசகம்: லூக்கா 14: 25-33 திருப்பலி முன்னுரை   பொதுக்காலம் 23ஆம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று இறைவனின் அருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.        சீடத்துவ வாழ்வு என்பது தன்னுடைய அனைத்தையும் இறைவனுக்காக துறந்து தன்னலமற்ற தியாக வாழ்வு வாழ்வதே. இதை நம் இறைமகன் இயேசுவும் தன் வாழ்வு வழியாக வாழ்ந்து காட்டினார். சீடத்துவத்தின் முன்மாதிரியாக இன்றும் நம்மிடையே வாழ்ந்து வருகிறார் நம் இறைவன்.           தான் மேற்கொள்ளும் காரியத்தை குறித்த சுயபரிசோதனையும், சீரிய தொலைநோக்கு பார்வையும், சிறந்த ஆளுமையும் கொண்டு செயல்படுவதே சீடத்துவ வாழ்வின் ஆதாரங்கள். பின்னர் நடக்கவிருப்பதை முன்னரே அறிந்து அதற்கேற்ப திட்டங்கள் வகுத்து இறைவனுக்காக வாழ்வதே உண்மை சீடத்துவம்.    அன்பின் உயர்நிலையாய், விசுவாசத்தின் இலக்கணமாய் தன்னைக் குறித்த கவலையின்றி பிறருக்காக தன்னை அர்ப்பணிக்கும் தியாக மனம் சீடத்துவத்தின் பரிணாமமாய்...

ஆண்டின் பொதுக்காலம் 22ஆம் ஞாயிறு

படம்
  நிறம் : பச்சை வாசகங்கள் முதல் வாசகம் : சீராக் 3:17-18,20,28-29 இரண்டாம் வாசகம் : எபிரேயர் 12:18-19, 22-24 நற்செய்தி வாசகம் : லூக்கா 14:1,7-14 திருப்பலி முன்னுரை   பொதுக்காலம் 22ஆம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் இறைமக்கள் மற்றும் இறைபணியாளர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.     விருந்து என்பது அன்பின் வெளிப்பாடு. விருந்து வைப்போருக்கும் விருந்துக்கு அழைக்கப்பட்டோருக்கும் அறிவுரையாக நற்செய்தி வாசகம் அமைகிறது. ஏழைகளையும் கைவிடப்பட்டோரையும் விருந்துக்கு அழைப்பதால் அவர்களும் பயன்பெறுவர் கைம்மாறும் மிகுதியாகும் என்கிறார் ஆண்டவர்.    மனத்தாழ்வும் கனிவும் கொண்டு தன்னைத் தாழ்த்தி கொள்ளும் எவரும் முதன்மையாவர். தானே அனைத்திலும் சிறந்தவர் என்று எண்ணும் எவரும் கடைசியாவர். இதை உணர்ந்து தாழ்ச்சியும் பொறுமையும் கொண்டு வாழ வேண்டும்.        தன்னைத் தாழ்த்திக் கொண்டு பாடுகளை ஏற்க துணிந்த இறைமகன் உலகின் அரசரானார். தவறான கணிப்புகளை வாழ்வில் இருந்து அகற்றி என்றும் உயிருள்ள இறைவனிடம் சரணாக செபிப்போம். வாழும் கடவுள் நமது தாழ...

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

படம்
  நிறம் : பச்சை வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 66:18-21 இரண்டாம் வாசகம் : எபிரேயர் 12:5-7,11-13 நற்செய்தி வாசகம் : லூக்கா 13:22-30 திருப்பலி முன்னுரை   தள்ளாடும் கால்களைத் திடப்படுத்தும் இறைவனது இல்லம் தேடி இறையருள் பெற்று செல்ல வந்துருக்கும் இறைமக்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.    ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்கும் நாம் நற்செய்தியில் இடுக்கமான வாயில் வழியாக பயணிப்பது குறித்து சிந்திக்க இருக்கிறோம்.     இறைவன் தான் குறித்த நேரத்தில் குறித்த திட்டத்தை நிறைவேற்றுபவர். அவரது இறைத்திட்டம் என்றுமே நிலையானது, மாறாதது, மக்களுக்கு நன்மைபயப்பது. அவரது ஆட்சியின் பாதை மிகவும் குறுகலானது. அதனுள் நுழைய ஆண்டவர் அளிக்கும் பயிற்சியும் அவரது கண்டிப்பும் அவசியம்.     வைரத்தின் பளபளப்பு அதன் பட்டைத்தீட்டப்படும் நேரத்தைப் பொறுத்தே அமையும். அவ்வண்ணமே ஆண்டவரின் கண்டிப்பு நம்மைப் பட்டைத்தீட்டி அவரது ஆட்சியில் பங்குபெற உதவும். அவரது கண்டிப்பு தள்ளாடும் கால்களை திடப்படுத்தி, நம்மை நேர்மையான பாதையில் வழிநடத்தி, இடுக்கமான வாயிலில் எள...

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

படம்
  நிறம் : பச்சை வாசகங்கள் முதல் வாசகம் : எரேமியா 38 : 4-6, 8-10 இரண்டாம் வாசகம் : எபிரேயர் 12 : 1-4 நற்செய்தி வாசகம் : லூக்கா 12 : 49-53 திருப்பலி முன்னுரை    ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று இறையாசீர் பெற வந்திருக்கும் இறைமக்களாகிய உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.   இறைவாக்கினர்கள் எவ்வாறு உண்மையான வாழ்வு வாழ வேண்டும் என்றும் இறைவன் துணையோடு நம் வாழ்வை எங்ஙனம் சீரமைக்க வேண்டும் என்றும் இன்றைய வாசகங்கள் நமக்கு தெளிவுபடுத்துகின்றன.     உண்மையான உறவுகளில் பிளவுகள் இருப்பதில்லை. பிளவுகளை ஏற்படுத்தும் உறவுகள் இறைவனின் அருள் பெற்றவை ஆகாது. தந்தை - மகன், தாய் - மகள், என்று எதிரெதிராக பிளவுபட்ட சமூகத்தை சீர்படுத்தி மீட்டெடுக்கவே இறைமகன் உலகிற்கு வந்தார்.      மனிதனுக்கு மனிதன் பிளவுபட்டு வாழ்வதை விடுத்து இணைந்து பயணிக்க இறைவன் நம்மை அழைக்கின்றார். வேறுபாடுகளைக் களைந்து இணைந்து வாழ்வதே என்றும் சிறந்தது. இணைந்து பயணிக்கும் சமூகம் என்றும் பிளவுறாமல் ஒற்றுமையின் பிறப்பிடமாக, அனைவரையும் ஏற்றுக்கொண்டு நிலைவாழ்வு ப...

ஆண்டின் பொதுக்காலம் 19ஆம் ஞாயிறு

படம்
  நிறம் : பச்சை வாசகங்கள் முதல் வாசகம் : சாலமோனின் ஞானம் 18 : 6-9 இரண்டாம் வாசகம் : எபிரேயர் 11 : 1-2,8-19 நற்செய்தி வாசகம் : லூக்கா 12 : 32-48 திருப்பலி முன்னுரை    ஆண்டின் பொதுக்காலம் 19ஆம் ஞாயிறு வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்று இறையாசீர் பெற்றுச்செல்ல வந்திருக்கும் இறைமக்களை நெஞ்சார அன்புடன் வரவேற்கிறேன்.    ஒருவர் தனித்து நின்று அனைத்து அநீதிகளையும் கொடுமைகளையும் சந்தித்து வெல்வது நடைமுறை வாழ்வில் சிரமமானது. ஒருங்கிணைந்த இயக்க ஆற்றல் மட்டுமே ஒடுக்கும் அமைப்புகளை தகர்த்து புதிய சமுதாயம் படைக்கும்.    எனவே அனைவரும் ஒத்த கருத்துடன் இணைந்து, தங்களிடையே இணைப்பு பாலங்களை உருவாக்கி இயக்கமாக உருவாக வேண்டியது வரலாற்று தேவை. இதன்மூலம் உலகை மாற்றும் ஆற்றல் மிகுந்தவர்களாக நாம் மாற இயலும்.    இன்றைய உலகில் நாம் இணைந்து வாழ பல காரணிகள் தடையாக உள்ளன. விளம்பரம், நுகர்வு வெறி, திரைப்படம், சமூக வலைத்தளங்களில் தேடும் போலியான அங்கீகாரம், தன்னுடைய அடையாளத்திற்கான தேடல், போலியான முன்மாதிரிகள் போன்றவை மனிதர்களை தன்னுணர்வு பெற விடாமல் தடுக்கின்றன. இத்தகைய சூழலி...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா